இது தினமணி செய்தி:

ஜெயலலிதா வீட்டில் ஆதிக மின்சாரம் பயன்படுத்தக் காரணம் ஏன்ன?

சென்னை, நவ. 14:
ஏதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் வீட்டில் மின்சாரம் ஆதிகம் பயன்படுத்தக் காரணம் என்ன? என்பதை ஏதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார் சட்டப் பேரவையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூடுதல் செலவுக் கான துணை மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் அவர் பேசும்போது அந்த விளக்கத்தை ஆளித்தார்

ஓ.பன்னீர்செல்வம்: எங்கள் கட் சித் தலைவர் ஜெயலலிதா 2 மாதத் துக்கு மின்கட்டணமாக ரூ. 1 லட்சத் துக்கும் மேல் செலுத்துகிறார் ஏன்று ஆமைச்சர் இர்க்காடு வீராசாமி வியாழக்கிழமை தெரிவித்தார். ஜெயல்லிதா வீட்டில் இருந்தே, முழு நேரமும் கட் சிப் பணிகளை மேற்கொள்கிறார். பாதுகாப்பு காரணமாக, வீட்டைச் சுற் றிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட் டுள்ளன. ஏனவே, ஆதிக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி: தமிழகத்தில் 4 மணி நேரம் மட்டுமே மின் சாரம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டு கிறீர்கள். ஆப்படி, 4 மணி நேரம் மட் டுமே வழங்கப்பட்டால், ஈந்த ஆளவுக்கு ஏப்படி மின்சாரத்தைப் பயன்ப டுத்தி ஈருக்க முடியும் ஏன்பதற்காகவே ஆந்த தகவலைச் சொன்னேன்.

ஓ.பன்னீர்செல்வம்: சொந்தப் பணத்தில் தான் ஜெயல்லிதா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தி வருகிறார்.

சில கிராமங்களுக்கான மின்சாரத்தை ஒரே ஒரு போயஸ் தோட்டம்
உறிஞ்சும் கேவலத்தை அரங்கேற்றிவரும் தலைவியின் கட்சிஅடுத்தமுறை மின் பற்றாக்குறையை பற்றிப்பேசும் பொழுது எதைக்கொண்டு அடிப்பது என்று முடிவு செய்யுங்கள்.
போயஸ் கார்டன் மேல பிளேன் பறந்தால் கூட கருனாநிதியை இராஜினாமா செய்ய்ச் சொல்லும் ஜெயாவை விட்டு விடுவோம். அவரது அள்ளக்கைகள் ஜெயா டீவியில் போலீசை கண்டித்து அளித்த பேட்டி இருக்கிறதே..அட்டா, இரட்டை வேடம் பூணும் இந்த அள்ளக்கைகளை அம்பலப்படுத்தவே இந்தப் பதிவு.

தா.பாண்டியன்

ஜெயா டீவியில் இன்று:
மாணவர்களின் கொலைவெறி தாக்குதலின் போது போலீசார் கைகட்டி வாய்பொத்தி, கண் மட்டும் திறந்து பார்த்துக் கொண்டு நிற்பது அராஜகம். கருணாநிதி ஆட்சியிலிருந்து விலகவேண்டும்

சன் டீவியில் அன்று:
மாணவர் போராட்டத்தைக் கலைக்க போலீஸ் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறது. இது அராஜகம்,ஜெயல்லிதா ஆட்சியிலிருந்து விலகவேண்டும்

எச்சு. இராஜா மற்றும் இல. கனேசன்

ஜெயா டீவியில் இன்று:
அது எப்படி போலீசார் கல்லூரிக்குள் நுழையாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கலாம், முதல்வர் ஆனையில்லாமல் இப்படி செய்யமுடியுமா? கருணாநிதி உடனே இராஜினாமா செய்ய வேண்டும்

சன் டீவியில் அன்று:
அது எப்படி போலீசார் சங்கர மடத்தில் நுழைந்து கைது செய்யலாம், சர்ச் ஆப் இங்கிலாந்துக்குள் சென்று போப்பை இப்படி கைது செய்ய முடியுமா? ஜெயல்லிதா உடனே இராஜினாமா செய்ய வேண்டும்

வை.கோ

ஜெயா டீவியில் இன்று:
நான் கேட்கிரேன், கலவரம் நடக்கும் என தெரிந்தும் போலீசார் தடுக்காத்து ஏன்?
வேடிக்கை பார்க்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. போலீஸ் துறைக்கு பொருப்பேற்றிருக்கும் முதல்வர் கருணாநிதி உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.

சன் டீவியில் அன்று:
நான் கேட்கிரேன், அரசு ஊழியர் போராட்டத்தை போலீசார் தடுத்த்து ஏன்?
அரசு ஊழியர்களை அடிக்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. போலீஸ் துறைக்கு பொருப்பேற்றிருக்கும் முதல்வர் ஜெயல்லிதா உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.

ஆகவே மக்களே இரண்டு சமூகங்கள் வெட்டிக்கொணத்டு செத்தால் அதில் இரத்தம் குடிக்க இந்த ஓநாய்கள் தயாராய் இருக்கின்றன். எறிகின்ற வீட்டில் பிடுங்கிய வரை சீட்டு என இவர்கள் போடும் கணக்கை முறியடிப்போம்.

பின் குறிப்பு:

நேற்று சட்டக் கல்லூரியில் மாணவர் அடிதடியை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்த போலீசாரின் போக்கு அயோக்கியத்தனமானது. அதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
நேற்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து தமிழகமெங்கும் உள்ள சட்டக்கல்லூரிகளில் இன்று வன்முறை அரங்கேரியது. இது ஒரு சாதிக்கலவரத்தை தூண்டிவிடுமோ என்ற பீதியில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். அதற்கேற்றார்போல அடிபட்ட மாணவர்களின் ஊர்களில் போலீசார் குவிப்பு. இது தொடர்பான நடுநிலை செய்தி மற்றும் படங்களுக்கு வினவு தளத்திற்கு செல்லவும்.

நமது சிறப்பு நிருபர்.
 நான் ஸ்டாப் பிளாக் நியூஸ் சேனல்